அடுத்த பதிவு, ஒரு சிறிய சிற்ப தொகுதியை பற்றி. ஆரம்பிக்கவே இல்லை, என்று கூறுவதா? இல்லை, நமக்கு அதன் முழுமை புரியவில்லையா என்று தெரியவில்லை !
இந்த தொகுதி இரண்டு விதமான கருப்பொருளை ஆராய்ச்சியாளர்களுக்கு தருகிறது ! முதலாவது, கோடை காலத்தில், யானைகள் தண்ணீர் தேடி செல்லும். அப்படி சென்ற ஒரு குழு, தண்ணீரை பார்த்ததும், ஆசை தீர அருந்தும் காட்சி. இரண்டாம் கதை, ஜடாகா கதைகளில் வரும் ஒரு கதை. ஒரு யானைக்கும், கபிஞ்சலி என்ற பறவைக்கும், குரங்கிற்கும் ஒரு மரத்தின் அடியில் வாக்குவாதம். தங்களில் யார், அந்த மரத்தை சொந்தம் கொண்டாடுவது என்று. இந்த இரண்டு செய்திகளோடும், தொடர்புடைய இந்த சிற்பத்தை பார்போம்.
ஒரு பறவை, ஒரு குரங்கு , சில யானைகள் ! என்ன இருக்கிறது இதில்.... இது பல்லவர்களின் கலை பாணியில் ஒரு அடுத்த முயற்சி. குடைவரை, ரதங்கள், கட்டுமான கோவில்களை போல, இதுவும் ஒரு வகை. கொட்டோவியமாகவும் இல்லாமல், முழுமையாக முப்பரிணாம சிற்பமாகவும் இல்லாமல், இரண்டிற்கும் நடுவே புடைப்பு சிற்பமாக இருக்கிறது இது !
அடுத்து இங்கு செதுக்கி இருக்கும், யானை ! இவ்வளவு நுணுக்கமாக யானையை யாரும் இதுவரை செதுக்கவில்லையாம்! ஒரு பெரிய யானை, அதன் கீழே துதிக்கையால் இல்லாமல், வாயால் தண்ணீரை அருந்த துடிக்கும் ஒரு குட்டி யானை, அதன் முன்னே சிறியதாய் ஒரு யானை, அது தூரத்தில் இருக்கிறதாம், அதனால் அது சிறிதாக தெரிகிறது, அந்த பெரிய யானைக்கு மேல் ஒரு யானை, தன் துதிக்கையை வளைத்தது போல உள்ளது !
அதனால் என்ன? இதெல்லாம் எதற்கு? கொஞ்சம் மேலே பார்த்தோம் என்றால், ஒரு சிறிய பள்ளம் போல வெட்டு. அந்த பாறையின் மேலே ஆரம்பித்து, யானைகளின் மேல் உள்ள நிலை வரை செதுக்கப்பட்டிருக்கிறது. அதன் மேல் ஒரு தொட்டி.. அது இப்போது இல்லை ! தொட்டி இருந்தபோது, அதில் நீரை நிறைத்து, வழிய விட்டால், அந்த சிறிய பள்ளம் வழியே, தண்ணீர்,
யானைகளை அடையும்... என்ன ஒரு தொலைநோக்கு பார்வை ! தண்ணீர் தேடும் யானைகள் ! தண்ணீர் குடிக்க, துதிக்கையை வளைத்து பிடிக்கும் ஒரு யானை ! தண்ணீரில் ஆசை தீர விளையாடு ஒரு யானை! அதுவும், துதிக்கையால் இல்லாமல்,தன் வாயால், உடலை கீழே இறக்கி, அது படுத்திருப்பதை போல அழகாக வடிக்கப்பட்டிருகிறது ! பெரிய யானை, நிஜமாகவே ஒரு யானையின் உடற்கூறியல் பற்றி படித்து, அறிந்து கொண்டு வடித்திருக்கின்றனர் ! அழகான சிறிய புடைப்பு சிற்பம் !
யானைகளை அடையும்... என்ன ஒரு தொலைநோக்கு பார்வை ! தண்ணீர் தேடும் யானைகள் ! தண்ணீர் குடிக்க, துதிக்கையை வளைத்து பிடிக்கும் ஒரு யானை ! தண்ணீரில் ஆசை தீர விளையாடு ஒரு யானை! அதுவும், துதிக்கையால் இல்லாமல்,தன் வாயால், உடலை கீழே இறக்கி, அது படுத்திருப்பதை போல அழகாக வடிக்கப்பட்டிருகிறது ! பெரிய யானை, நிஜமாகவே ஒரு யானையின் உடற்கூறியல் பற்றி படித்து, அறிந்து கொண்டு வடித்திருக்கின்றனர் ! அழகான சிறிய புடைப்பு சிற்பம் !
No comments:
Post a Comment