இதுவும் நமக்கு தெரிந்தக் கதைதான் ! வாமன
அவதாரத்தின் கதை ! தெரியாதவர்களுக்கு, கதைச் சுருக்கம் சொல்கிறேன். மகாபலி என்று
ஒரு அசுரன் இருந்தான். மிகப் பெரிய விஷ்ணு பக்தன். அவன் குரு, சுக்ராச்சாரியாரின்
சொல் படி, ஒரு பெரிய யாகம் நடத்துகிறான். யாகம், நடந்து முடிந்தால், அவன் இந்திர
பதவிக்கு தகுதி உடையவனாகி விடுவான்! விடுவார்களா, இந்த தேவர்கள், மகாவிஷ்ணுவிடம்
போய் முறையிடுகிறார்கள்! ஒரு அசுரன், இந்திர பதவிக்கு வரவே கூடாது, ஆவண
செய்யுங்கள் என்று! கிளம்பினார், மகாவிஷ்ணு, ஒரு சிறிய உருவம் கொண்டு. வாமன
அவதாரம் ! ஒரு குடை, கமண்டலம், கொண்டு வரும் சிறிய உருவத்தை , சந்தேகத்தோடு
பார்கிறார் சுக்ராச்சாரியார் . மகாபலியை எச்சரிக்கை செய்கிறார். அவனைப்
பார்த்தால், சரியாக இல்லை, எதையும் தானம் தருவேன் என்று ஒப்புக்கொள்ளாதே
என்கிறார். ஆனால், யாகத்தின் முடிவில் யார் எதை தானமாக கேட்டாலும் தரவேண்டும்
என்பதுக் கட்டாயம்! மகாபலிக்கு, வேறு வழி இல்லை, யாகம் முற்றுப் பெற வேண்டும்
என்றால் தானம் வழங்கியே ஆக வேண்டும்.
அருகில் வந்து நிற்கிறார் வாமனன் . என்ன
வேண்டும் என்று கேட்கிறான், பலி! எனக்கு என்ன, நான் வாழ மூன்றடி மண் வேண்டும்,
மன்னா என்று தயங்கி தயங்கி கேட்கிறார். சுக்ராச்சாரியாருக்கு, எதோ பொறித் தட்டி,
எப்படியாவது இந்த யாகத்தை நிறுத்த தேவர்கள் செய்யும் சூது இது என்று எண்ணம் கொண்டு
, ஒரு வண்டாக மாறிக் கமடலத்தின் உள்ளே சென்றுவிடுகிறார். வாமனனோ ஒரு தர்பை புல்லை
எடுத்து, கமண்டலத்தின் உள்ளேக் குத்தி விடுகிறார் ! அது குருவின் கண்ணை காயப்படுத்திவிடுகிறது
! அங்கிருந்துப் பறந்து விடுகிறது வண்டு !
பலிக்கு, புரிந்து விட்டது, வேறு வழியே இல்லை!
தானம் , தந்தாக வேண்டும்! எடுத்துக்கொள்ளுங்கள் நீங்கள் கேட்ட மூன்றடி மண் என்று
நீர் வார்த்துத் தானம் கொடுக்கிறார் !
இது தான் முன்கதை! இப்போது இந்த சிற்ப்பத்தை
பாருங்கள்!
வாமணன், உயர்ந்து விஸ்வருபம் கொண்டு, திருவிக்ரமனாய் காட்சித்
தருகிறார். ஒரு அடியில் மண் உலகையும், இரண்டாம் அடியில் வானுலகையும் அளந்து,
மாபலியை பார்த்து, மூன்றாம் அடிக்கு மண் வேண்டுமே என்றுக் கேட்கிறார்!திகைத்து போன
மகாபலி, தன் தலையின் மீது கால் வைத்து, மூன்றாம் அடியை அளக்கச் சொல்லிக் கீழே
அமர்கிறான்! அப்படியே அவனை பாதாள லோகம் வரை, அனுப்புகிறார் வாமணன்!
இப்போது, இந்த சிற்ப்பத்தை நோக்குங்கள்,
விக்ரமரில் இருந்து ஆரம்பிப்போம் ! விஸ்வருபம் கொண்டு நிற்கிறார்! ஒரு கால்
மண்ணில், இன்னொரு கால் தூக்கிய நிலையில் !காலின் அடியில் நால்வர் இருகின்றனர் ! அவருடைய
தூக்கிய காலுக்கு அடியில், இருவர் இருகின்றார். கைகள், அவர்களின் வாளை நாடி
இருகின்றது !முகத்தில் ஒரு கோபம், பிரமிப்பு! தங்களால், அடக்க கூடிய, முடிந்த ஒரு
எதிரியின் முன் தங்கள் இல்லை என்பது தெரிந்தும், தங்களின் அரசருக்காக போராட
தயாராகும் அசுர கூட்டம்! ஒருவன் , காலுக்கு அடியில் கிடக்கும் நிலையில்
இருக்கிறான், அடுத்தவன் வாளை உருவி, திருவிக்ரமனை பார்த்து வியந்து
கொண்டிருக்கிறான்!
கொஞ்சம் மேல் நோக்கி பார்த்தால், ஒளி வட்டங்களோடு
இடது புறமும், வலதுபுறமும் இருவர் உள்ளனர்! அவர்கள், சூரியனும் , சந்திரனும்
அவார்கள் !அதாவது, திருவிக்ரமரின் கால், சந்திர மண்டலத்தையும், சூர்ய
மண்டலத்தையும் தாண்டி வான் வெளியில்
பயணித்துக் கொண்டிருகிறது. அங்கு அந்தரத்தில் ஒருவன் தொங்கிக்கொண்டிருகிறான்.
அவன், பலியின் முக்கிய வீரன்! அரசனை, காக்க போரிட்டு வாமனனால் தூக்கி எறியப்பட்டு
தொங்கிக்கொண்டிருகிறான் ! விக்ரமரின், தூக்கிய கால்கள், சத்தியலோகத்தை அடைந்த
போது, அங்கு நான்முகன், தன் தந்தையின் கால்கள் இவை, என்பதை அறிந்து பாதபூஜை
செய்கிறார் !
பிறகு, திருவிக்ரமரின் உருவம் , விஸ்வருபதை
காண்பிப்பதற்காக, பிறர் உருவங்களை சிறிதாய் செதுக்கி உள்ளனர்! எட்டு கரங்களுடன்,
ஆயுதங்கள் ஏந்திய உருவம்!
இதை போன்ற சிற்ப்பங்களை காண, கொடுத்து
வைத்திருக்க வேண்டும்! பாலுச்சாமி ஐயா, இந்த சிலைகள் எல்லாம் வழிபாட்டில்
இருந்திருக்கும் என்று கூறினார்! எப்படி இருந்தாலும், இந்த சிலையை, இவ்வளவு
நுணுக்கமாக இதுவரை நான் பார்த்ததில்லை ! அடுத்தமுறை, இன்னும் நிறைய பார்க்க
வேண்டும் ! மல்லை பயணங்கள் தொடரும் ....

No comments:
Post a Comment